Friday, August 22, 2008

விடியலை நோக்கி…

மேகக் மூட்டங்களாக

குழப்பங்களே நகர்ந்துக் கொண்டிருக்கின்றன…

கலங்கிய மனதை

திசைதிருப்ப போராடி

தோற்றுபோகின்றன

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும்

திரைப்பட பாடல்களும்

புத்தகங்களும்

செல்பேசி குறுந்தகவல்களும்…


பாச்சை, பல்லி, கொசு

இவற்றோடு

நள்ளிரவில் ஏதோ ஒரு பறவை

மனதை வருடும்

ராகம் இசைத்து

இசைக் கச்சேரியை

மெருகூட்டி

அழைத்து செல்கிறது

விடியலை நோக்கி…
Murugan Subbarayan

Friday, August 1, 2008

அருங்காட்சியகத்தில் நான்

கடிதம் கொடுக்க வரும் போது
நலம் விசாரிக்கும்
அஞ்சல் அலுவலர்
வருவதில்லை
எல்லா கடிதங்களும்
மின்னஞ்சலுக்கே
வந்துவிடுகின்றன.


அறிவுரை வழங்கும்
வங்கி அதிகாரியை
சந்திப்பதில்லை
பணம் எடுப்பதும் போடுவதும்
தெரு முனையில் இருக்கும்
தானியங்கி இயந்திரத்திலேயே
முடிந்து விடுகிறது.

மின் கட்டணம் செலுத்துவது
வீட்டு பொருட்கள் வாங்குவது
இதர எல்லாமே
இணையம் மூலமே...

என்னை பாட வைத்த
சிட்டுக் குருவிகளும்
வருடி செல்லும் வேப்ப மரக்காற்றும்
இங்கில்லை.

உயிருள்ள நடைபிணமாக
அருங்காட்சியகத்தில் வைக்க
தயாராக நான்...
Thanks http://www.thinnai.com/?module=displaystory&story_id=308073112&format=html