அம்பத்தேழு வயசு கணவன்
சர்க்கரை வியாதியால்
செத்து போனதுக்கு
வாயையும் வயிற்றையும்
அடித்துக்கொண்டு
அழும் மனைவி,
“என் ராசாவ
எடுத்து போனதுக்கு பதிலா
தொண்ணுத்தி மூணு
வயசுலயும்
கல்லு மாதிரி இருக்குற
அவர் அம்மா போயிருக்கலாமே…”
என்கிற புலம்பலை....
டிவி நாடகங்கள் பார்க்காமல்,
கதை சொல்லி,
நிலா சோறு ஊட்டி,
நடக்க கத்து கொடுத்த
பாட்டியா பத்தி
பேசுறது கேட்டு
பதறுகிற
பேரக் குழந்தைகளுக்கு
தெரிய வில்லை
ஐம்புலன்களையும்
அடக்கி
தியானம் பயின்ற
பாட்டியின் காதில்
கடும் சொற்கள்
விழ போவதில்லை என....
Thanks to http://www.vaarppu.com/view.php?poem_id=1524
Saturday, September 27, 2008
Subscribe to:
Comments (Atom)