மின்வெட்டு
அம்மா ஊட்டிய
நிலாச் சோறு...
அப்பா சொல்லித் தந்த
பாடம் கவனிக்காமல்
மண்ணெண்ய் விளக்கில்
இறந்த விட்டில் பூச்சிக்காக அழுதது...
திண்ணை இருட்டில்
கதைச் சொல்லி
தூங்க வைத்தப் பாட்டி...
தூங்குமூஞ்சி மரத்தில்
மின்மினி பூச்சிகளை
நட்சத்திரங்கள்
என பொய் சொன்னது...
மெழுகுவர்த்தி ஒளியில்
அசைந்தாடுது மனசு
இந்த மின் நிறுத்தத்தில்...
Friday, July 13, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment