Friday, June 13, 2008

கவிதை

ஏமாற்றங்களும்
ஏமாற்றுகிறவர்களும்
பயமும்
மரணத்தோடு
போட்டி போட்டுக் கொண்டு
என்னை துரத்தியப்படி
ஓடுகிறேன்.
அவர்கள்
கால் வலிக்காகவாவது
திரும்பி விடமாட்டார்களா
என ஏங்கி
திரும்பி திரும்பி
பார்த்து ஏமாந்து ஓடுகையில்,
என் கால் வலிக்கு
ஒத்தடமானது
இந்த கவிதை.

Murugan Subbarayan
Thanks to http://www.thinnai.com/?module=displaystory&story_id=30806129&format=html

No comments: