மேகக் மூட்டங்களாக
குழப்பங்களே நகர்ந்துக் கொண்டிருக்கின்றன…
கலங்கிய மனதை
திசைதிருப்ப போராடி
தோற்றுபோகின்றன
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும்
திரைப்பட பாடல்களும்
புத்தகங்களும்
செல்பேசி குறுந்தகவல்களும்…
பாச்சை, பல்லி, கொசு
இவற்றோடு
நள்ளிரவில் ஏதோ ஒரு பறவை
மனதை வருடும்
ராகம் இசைத்து
இசைக் கச்சேரியை
மெருகூட்டி
அழைத்து செல்கிறது
விடியலை நோக்கி…
Murugan Subbarayan
1 comment:
kavithai nantraaka ullathu murugan.ananthuvoodu ungkaLai veelacheeriyil baarththathaka oru njaabakam.anaduvin maraNam ennai mikavum baathiththathu
Post a Comment