Friday, July 4, 2008

மாய உலகம்

வெள்ளி கிழமை
மட்டும் சாமி படத்துக்கு
பூ மாலை போடுகிறாள்
எதிர் வீட்டுப் பெண்.

கதவு தாழ்ப்பாளில்
பூக்காரன் வைத்து
செல்லும் பூப்பொட்டலம்
காய்ந்தே போகிறது
மற்ற நாட்களில்.

பூவுக்கும் தெரிவதில்லை
சாமிக்கும் தெரிவதில்லை
அந்த பெண்ணுக்கு
தொலைக்காட்சி பார்த்துக் கொண்டே
பாசி மணி
பிளாஸ்டிக் நரம்பினால்
பூ மாலை செய்யவே
நேரம் சரியாய் இருக்கு என.....

Ambal Murugan

Thanks to www.thinnai.com
http://www.thinnai.com/?module=displaystory&story_id=30807038&format=html

No comments: