ஆடு மாடு மேச்சி
உளுந்து பயறு புளி காய வச்சி
அம்மி குடக்கல் உரல் பயன் படுத்தி
அப்பளம் வடவம் போட்டு
கம்பு கேழ்வரகு
பழைய சாதம் ஊறுக்காய் சாப்பிட்டு
வாசல் பெருக்கி
அடுப்பு மொழுவி
வெத்தலை போட்டு பழகியவளுக்கு.....
மிக்சி கிரைண்டர் குக்கர்
ஃபிஸா பெப்சி
அஞ்சு நாளைக்கு
தேவையானத சமச்சி
ஃபிரிட்ஜ்-க்குள் வச்சு
டிவி பாத்துட்டே
புழுக்கமான ஃபேன் காத்துல
சாப்பிட்டு தூங்கி
தூங்கி சாப்பிட்டு
இந்த வேகமான
நகர நரக வாழ்க்கை பிடிக்காமல்.....
கிராமத்துக்கு பஸ்
ஏத்திவிடுரா மொவனே
என்கிறாள் அம்மாக்காரி.
~ ambal murugan
Thanks to Vaarppu
http://vaarppu.com/view.php?poem_id=1477
Saturday, July 5, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment